தமிழகம்

பேர்ணாம்பட்டில் நாட்டு துப்பாக்கிகள் வைத்திருந்தவர கைது

77views
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பகுதியில் சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கிகள் பயன்படுத்தபடுவதாக வேலூர் மாவட்ட எஸ்.பி.மணிவண்ணனுக்கு தகவல் கிடைத்தது.  அவரின் உத்தரவின்பேரில் பேர்ணாம்பட்டு காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையில் காவல்துறை நடத்திய சோதனையில் கொத்தபள்ளியை சேர்ந்த சின்னராசு, ரகுபதி ஆகியோர் கொண்டம்பள்ளி கிராமத்தை சேர்ந்த ரங்கநாதன் என்பவருக்கு சொந்தமான மோட்டார் அறையில் மறைத்து வைத்திருந்த 2 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்து ரகுபதியை கைது செய்தனர்.  தப்பிய சின்னராசுவை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!