தமிழகம்

வேலூரில் ராகுல் காந்தியின்மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததை கண்டித்து காங்கிரஸ் சாலை மறியல்

23views
சூரத் நீதிமன்றம் விதித்த 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது குஜராத் உயர்நீதிமன்றம். ராகுல்காந்திக்கு எந்த இடைக்கால நிவராணமும் வழங்க முடியாது என நீதிபதி தீர்ப்பு அளித்தார்.  இதனை கண்டித்து வேலூர் மாநகர காங்கிரஸ் கமிட்டிசார்பில் கட்சி அலுவலகம் எதிரில் மாவட்ட செயலாளர் டீக்காராமன் தலைமையில் சாலைமறியல் நடந்தது.
இதில் எஸ்.சி. பிரிவு மாநில செயலாளர் சித்ரஞ்சன், சிறுபான்மை பிரிவு வாகீத் பாஷா, வேலூர் மாவட்ட டிசிடியூ தலைவர் பிரேம்குமார், காட்பாடி ஒன்றிய செயலாளர் இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  காவல்துறை 30 பேரை கைது செய்து பின்பு விடுதலை செய்தனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!