தமிழகம்

வேலூர் வள்ளலாரில் தமிழ்நாடு அரசு அனைத்துதுறை பணியாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்

50views
வேலூர் அடுத்த வள்ளலாரில் உள்ள தலைமை சங்க அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர்கள் சங்க வேலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாநில கெளரவ தலைவர் சி. ராஜவேலு முன்னிலையில் நடந்தது.  அரசு தோட்டக்கலைப்பண்ணைகளில் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்களுக்கு ரூ 400-ஆக உயர்த்தி தர வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கு விடுப்பட்ட அகவிலைப்படி, சரண்டர் விடுமுறை, மற்றும் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
தோட்டக்கலைத்துறையில் பணிநிரந்தரம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு, பணிக்கொடை மற்றும் பதவி உயர்வு வேண்டுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  இதில் மாவட்ட தலைவர் ரமேஷ், மாவட்ட நிர்வாகிகள் தாண்டவ மூர்த்தி, முனுசாமி, முத்துச்சாமி, பாலகிருஷ்ணன், மணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!