தமிழகம்

வேலூரில் பிராமணர் சங்க பொதுக்கூட்டத்தில் தம்பதியர்களுக்கு வேட்டி மற்றும் சேலை வழங்கும் நிகழ்வு

97views
வேலூர் பிராமணர் சங்க செய்தி தொடர்பாளர் க.ராஜாவெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
வேலூர் பிராமணர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் வேலூர் பேரிப்பேட்டை சிவசுப்பிரமணியசுவாமி கோயிலில் நடந்தது.  வேலூர் கிளை சங்க தலைவர் மீனாட்சிசுந்தரம் தலைமை தாங்கினார்.  துணைச்செயலாளர் உமாபதி குத்து விளக்கு ஏற்றினார். துணைத்தலைவர் வெங்கட் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக தாம் ராஸ், மாநில துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு மாநில அளவில் சிறப்பாக பணியாற்றிய வேலூர் கிளைக்கான நினைவுப்பரிசை வழங்கி பாராட்டினார்.  ஆண்டு அறிக்கையை பொதுச்செயலாளர் சேகர் வாசித்தார்.  சங்க ஆலோசகர் சத்யமூர்த்தி, துணை பொருளாளர் விஜயராகவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  30 தம்பதியர்களுக்கு வேட்டி மற்றும் புடவை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை சங்க பி.ஆர்.ஓ.க.ராஜா தொகுத்து வழங்கினார். என்று அவர் செய்திகுறிப்பில் தெரிவித்து உள்ளார்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!