தமிழகம்

வேலூர் ஜெய்ஸ்ரீராம்சேவா சங்கம் சார்பில் புரட்டாசியில் பக்தர்களுக்கு அன்னதானம்

97views
வேலூரில் உள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தானமையத்தில் உள்ள பெருமாளை தரிசனம் செய்ய புரட்டாசி மாதம் முழுவதும் குறிப்பாக சனிக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும்.  வேலூர் ஜெய் ஸ்ரீராம்சேவா சங்கம் மூலம் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை அன்று சுமார் 2000 – க்கும் மேற்பட்டவர்களுக்கு தொடர் அன்னதானம் போடப்பட்டது.  வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன் அன்னதானத்தை துவக்கிவைத்தார்.  ஏற்பாடுகளை ஜெய்ஸ்ரீராம்சேவா சங்க தலைவர் சீனிவாசன், செயலாளர் இளங்கோவன் மற்றும் வெங்கடேசன், குமார், மோகன், மனோஜ், ராகேஷ் உள்ளிட்ட பலர் செய்து இருந்தனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!