தமிழகம்

நீதிமன்றத்தில் ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட். திருவில்லிபுத்தூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

96views
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் காவல் நிலையத்தில், கடந்த 2016 ஆம் ஆண்டு முகமது பரக்கத்துல்லா ஆய்வாளாராக பணியில் இருந்தார்.
இவர் பணியில் இருந்த போது, அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது 6 மாத குழந்தையை கிணற்றில் போட்டு கொலை செய்ததாக, முகமது பரக்கத்துல்லா வழக்கு பதிவு செய்தார். இது குறித்த வழக்கு திருவில்லிபுத்தூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
வழக்கின் விசாரணை அதிகாரியான ஆய்வாளர் முகமது பரக்கத்துல்லா, பணி மாறுதலாகி தற்போது சென்னையில் பணிபுரிந்து வருகிறார். வழக்கு விசாரணையின் போது பலமுறை சம்மன் அனுப்பியும் ஆய்வாளர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையில் சாட்சி சொல்வதற்காக, நீதிமன்றம் சம்மன் அனுப்பியும் ஆய்வாளர் முகமது பரக்கத்துல்லா ஆஜராகவில்லை. வழக்கை விசாரித்த கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி கோபிநாத், விசாரணைக்கு ஆஜராகாத ஆய்வாளர் முகமது பரக்கத்துல்லா மீது பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.
செய்தியாளர் : வி காளமேகம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!