தமிழகம்

ஆளுநர் பதவி தேவையற்றது. காந்தி கூறியதுபோல் ஆளுநர் மாளிகை மருத்துவமனையாக மாற்றலாம் திமுக ஆதரவு பெற்ற காங்கிரஸ் கட்சி ஈரோட்டில் மிக பெரிய வெற்றிபெறும். சனாதான சக்திகள். இந்துத்துவா தத்துவத்தை பெரியார் மண்ணில் நிலைநாட்ட பாஜக முயற்சி வெற்றி பெறாது – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

79views
மதுரையிலிருந்து சென்னை செல்ல வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு.
எண்ணற்ற மக்கள்நலத்திட்டங்கள் மூலம் மக்கள் செல்வாக்கை இந்த அரசு பெற்று வருகிறது.
இப்பொழுது நடைபெற போகின்ற ஈரோடு இடைத்தேர்தலிலும் திமுகவினுடைய ஆதரவை பெற்று இருக்கின்ற திமுக கூட்டணி கட்சியினுடைய ஆதரவு பெற்றிருக்கின்ற காங்கிரஸ் மிகப் பெரிய வெற்றியை பெரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
சனாதன சக்திகளை ஊக்குவித்து இந்துத்துவா தத்துவத்தை நிலை நாட்டலாம் என்று கருதி தந்தை பெரியாரின் மண்ணில் திராவிட இயக்க பூமியும் பாரதிய ஜனதா கட்சியினுடைய முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது.
அவர்கள் கோடிக்கணக்கிலே பணம் செலவழிக்கலாம் ஒவ்வொரு ஊரிலும் பணம் கொடுத்து கொடியேற்ற செயலாளர் பணம் கொடுத்து ஒரு கிளையை அமைக்க பார்க்கலாம்.  ஆனாலும் அவர்களால் வெற்றி பெற முடியாது அது ஆழ பறித்து திராவிட இயக்க உணர்வுகள் லட்சியங்கள் கொள்கைகள் இந்த மண்ணிலே ஆழப் பதிந்தவை .  அதற்கு பி .எம். நாயரும் , நடேசன், தியாகராயரும் தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களும் இன்று வெற்றிகரமாக திராவிட மாடல் ஆட்சி நடத்திக் கொண்டு வருகின்ற என்னுடைய ஆருயிர் சகோதரர் மானமிகு தளபதி மு க ஸ்டாலின் அவர்களும் அதற்கு இடம் கொடுக்க மாட்டார்கள்.  அந்த அளவுக்கு தமிழகம் பண்படுத்தப்பட்டிருக்கிறது இந்தியாவுக்கு வழிகாட்டுகின்ற மாநிலமாக இன்றைக்கு இருக்கிறது.  அப்படிப்பட்ட ஒரு நல்லாட்சியை நாளும் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றி வீடு தேடி மக்களுக்கு மருத்துவம் வரும் என்று சொல்லக்கூடிய வகையிலே ஒவ்வொரு திட்டத்தையும் புதுமையான இன்னோவேடிவ் இவரை இல்லாத வேறு மாநிலங்களில் முயற்சிக்காத திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றிக் கொண்டு வருகிறது.  ஆகவே இந்த அரசு மக்கள் செல்வாக்கை நாளுக்கு நாள் அதிகம் பெற்று வருகிறது என்பதுதான் நடைமுறை உண்மையாகும்.
தமிழக ஆளுநர் ரவி தொடர்ந்து தமிழக அரசின் எதிரான நிலை குறித்த கேள்விக்கு
ஆளுநர் பதவி ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று இதுதான் கொண்டு வந்தபோது நாடாளுமன்றத்தில் நான் பேசும்போது சொன்னேன் ஆளுநர் பதவி அகற்றப்பட வேண்டிய ஒன்று ஆச்சாரியா அவர்கள் காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த போது சொன்னார் அரசியலில் ஓய்ந்து போய் தோற்றுப் போனவர்களுக்கு பதவி கொடுப்பதற்காக இந்த ஆளுநர் மாளிகைகள் உருவாக்கப்பட்டன இதை ஏழை எளிய மக்களுக்கான மருத்துவமனைகளாக பயன்படுத்தலாம் என்று மகாத்மா காந்தி அவர்கள் சொன்னார்கள்.
ஆகவே தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிற ஆளுநர் அரசியல் சட்டத்திற்கு புறம்பாக அரசியல் சட்ட விதிகளுக்கு புறம்பாக நாளும் பேசி வருகிறார். தமிழ்நாட்டை தமிழகம் என்று சொல்லிவிட்டு இப்பொழுது அதற்கு எப்படியாவது அதை மறைக்க வேண்டும் என்பதற்காக போலித்தனமான விளக்கங்களை கண்டு கொண்டிருக்கிறார் அதிலிருந்து அவருக்கு தமிழ்நாட்டைப் பற்றி எதுவும் தெரியவில்லை என்பது நன்றாக புரிகின்றது.
ஒ.பி.எஸ் பாஜக ஆதரவு என்ற கேள்விக்கு?
ஈரோடு சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்கள் காங்கிரஸ் வேட்பாளர் மிகப்பெரிய வெற்றி பெறுவார் என்பதை நான் தெரிவித்து விட்டேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!