தமிழகம்

இயற்கை மரணமடைந்த இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு ஈமச்சடங்கு நிவாரணம் : ஆட்சியர் வழங்கினார்

47views
ராமநாதபுரம்மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கினார். மண்டபம் முகாமில் வசித்து, இயற்கை மரணம் எய்த இலங்கை தமிழர் 9 பேரின் குடும்பங்களுக்கு ஈமச்சடங்கு உதவித்தொகை தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.45 ஆயிரத்துக்கான காசோலை, கடலாடி அருகே குருவாடி அரசு உயர்நிலைப்பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவிகள் பாக்யஸ்ரீ காவியா ஆகியோருக்கு இந்திய ஆட்சி பணி, இந்திய காவல் பணி ஆகிய பணிகளுக்கான ரூ.6, 200 மதிப்புள்ள புத்தகங்களை மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், உதவி ஆட்சியர் நாராயண சர்மா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஷேக் மன்சூர், இலங்கை தமிழர் மறுவாழ்வு மையம் தனித்துணை ஆட்சியர் குரு சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!