உலகம்

துபாய் ஜாயித் பல்கலைக்கழக நூலகத்துக்கு திருக்குறள் அரபி மொழி நூல் அன்பளிப்பு

21views
துபாய் :
ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னணி பல்கலைக்கழகம் ஜாயித் பல்கலைக்கழகம் ஆகும்.
இந்த பல்கலைக்கழத்தின் நூலகத்துக்கு இந்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்ட திருக்குறளின் அரபி மொழி பெயர்ப்பு நூலை பல்கலைக்கழக நூலகத்தின் உதவி இயக்குனர் அபூபக்கரிடம்
ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் வழங்கினார்.
இந்த நூலை பெற்றுக்கொண்ட நூலக அலுவலர் நன்றி தெரிவித்தார்.
இந்த நூலை புது டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் முனைவர் பஷீர் அஹமது ஜமாலி மொழி பெயர்த்துள்ளார். மேலும் இவர் திருக்குறளை ஆங்கிலத்திலும், தொல்காப்பியதை அரபி மொழியிலும் மொழி பெயர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!