தமிழகம்

வேல் டெக் ரங்க சங்கு கலைக் கல்லூரியின் 24-வது பட்டமளிப்பு விழா

26views
வேல் டெக் ரங்க சங்கு கலைக் கல்லூரியின் (Vel Tech Ranga Sanku Arts College) 24-வது பட்டமளிப்பு விழா. ஆகஸ்ட் 22, 2026 அன்று கல்லூரி வளாகத்தில் உள்ள வேல் டாக்டர் ஆர்.ஆர் மற்றும் டாக்டர் எஸ்.ஆர் கன்வென்ஷன் சென்டரில் கோலாகலமாக நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் டாக்டர் அ.வீ.க. சாந்தி வரவேற்புரை ஆற்றியதுடன், கல்லூரியின் சாதனைகள் குறித்த ஆண்டு அறிக்கையைச் சமர்ப்பித்தார்.
இவ்விழாவிற்குக் கல்லூரியின் நிறுவனர் மற்றும் தலைவரான கர்னல். பேராசிரியர் வேல். டாக்டர் ஆர். ரங்கராஜன் மற்றும் நிறுவனத் தலைவி மற்றும் துணைத் தலைவரான டாக்டர் திருமதி சகுந்தலா ரங்கராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர் . கல்லூரியின் மேலாண்மை அறங்காவலர் திருமதி. ரங்கராஜன் மகாலட்சுமி கிசோர் மற்றும் கல்லூரியின் அறங்காவலர் மற்றும் உதவி இயக்குனர் செல்வி எஸ்கந்தா கே. வேல், ஆகியோர் பட்டமளிப்பு விழாவை அதிகாரப் பூர்வமாகத் தொடங்கி வைத்தனர்.
இவ்விழாவில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS). நிறுவனத்தின் ‘ஏர்லி கேரியர்ஸ் – பிபிஎஸ் மற்றும் டைவர்சிட்டி ஹையரிங்’ பிரிவின் தலைவர் திரு. ஜெய்சங்கர் தாமோதரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார் . அவர் தனது உரையில், “பட்டமளிப்பு என்பது ஒரு சேருமிடம் அல்ல, மாறாக நாம் அடைய விரும்பும் கனவுகளுக்கான ஒரு ஏவுதளம்” என்ற கல்லூரியின் தாரக மந்திரத்தை வலியுறுத்தினார். மேலும், கார்ப்பரேட் உலகில் மாணவர்கள் நுழையும்போது தேவையான தொழில்முறைத் திறன்கள் மற்றும் பன்முகத்தன்மையின் முக்கியத்துவம் குறித்தும் அவர் ஆலோசனைகளை வழங்கினார்.
இளங்கலை மற்றும் முதுகலை பயின்ற 379 மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. பட்டங்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கு, மேலாண்மை அறங்காவலர் திருமதி. ரங்கராஜன் மகாலட்சுமி கிஷோர் பட்டமளிப்பு உறுதிமொழியைக் கூற மாணவர்கள் கூறினர்.
இவ்விழாவில் பேராசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!