உலகம்

துபாயில் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியர் நலவாழ்வு பேரவை சார்பாக நடந்த மாபெரும் 55 வது ரத்ததான முகாம்

62views
துபாய் :
இந்திய சுதந்திரதினத்தை முன்னிட்டு 09.08.2026 ஞாயிற்றுக்கிழமை இந்தியர் நலவாழ்வு பேரவை (IWF) துபாய் மண்டலம் சார்பாக மாபெரும் 55வது ரத்ததான முகாம் அல் பராக மருத்துமனையில் மிக சிறப்பாக நடைபெற்றது..
இந்த இரத்த தான முகாமுக்கு அமீரக இந்தியர் நலவாழ்வு பேரவை தலைவர் அப்துல் ஹாதி தலைமையில் நடைபெற்றது.

துபாய் மண்டல செயலாளர் கீழக்கரை ஜைனுல் ஆபிதீன் , பொருளாளர் சேகு தாவூது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த முகாமிற்கு உடன்குடி கவின்முகில் முஹம்மது யூசுப், அமீரக தமிழ் தொழில் முனைவூர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் தலைவர் டாகடர் பால் பிபாகர், மூத்த ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத்துல்லாஹ், கார்டின் பல்கலைக்கழத்தின் பொறியியல் மற்றும் ஆராய்ச்சித்துறை இயக்குனர் பேராசிரியர் முனைவர் சித்திரை பொன் செல்வன், பிளசண்ட் டூரிசம் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மாஜிதா பேகம், பிரைம் எ.ஐ. நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் நூர் ஃபாத்திமா, லால்பேட்டை ஜமாத் செயலாளர் ஹாஜா, அமீரக இந்தியர் நலவாழ்வு பேரவை பொருளாளர் டாக்டர் அப்துல் காதர் மற்றும் முன்னால் மண்டல தலைவர் வி களத்தூர் பாரூக் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

100-க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டு இரத்தக் கொடை செய்தனர்.  இரத்த தானம் செய்த சகோதர்களுக்கு சான்றிதழ் காலை மற்றும் மத்திய உணவு வழங்கப்பட்டது.
எஸ். எம். ஐ. மாநில துணை செயலாளர் பொதக்குடி ரியாஸ், இந்தியர் நலவாழ்வு பேரவை ஷார்ஜா மண்டல தலைவர் சலீம் ரப்பானி, அதிரை சேக் அப்துல் காதர், மன்னை அமீன், ஜலால், லால்பேட்டை கிளைத்தலைவர் யாசிர் அஹமது, அசாருதீன், மசூத் அகமது, தன்வீர், நயீம், பஜுல் மற்றும் நிர்வாகிகள் ஹோர் அல் அன்ஸ் பொறுப்பாளர் முத்துப்பேட்டை சாதிக், சத்திரம் சாகுல்,துளசி அமீர், அல்கூஸ் பொறுப்பாளர் அய்யூப் மற்றும் நிர்வாகிகள், உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் சிறந்த முறையில் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

இறுதியாக அனைவருக்கும் உணவு எற்பாடு செய்த லால் பேட்டை சகோதர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!