தமிழகம்

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

44views
புத்தாண்டு முன்னிட்டு திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மூலவர் சுப்ரமணிய சுவாமிக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவில் அமைந்துள்ள தமிழ் கடவுள் முருகனின் முதல் படை வீடான சுவாமி கோவிலில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

உள்ளூர் பக்தர்களின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஐயப்ப பக்தர்கள் மற்றும் மேல்மருவத்தூர் பக்தர்கள் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
புத்தாண்டை முன்னிட்டு இன்று மூலவரான சுப்பிரமணிய சுவாமிக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!