தமிழகம்

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் கட்டணமில்லா பேருந்துப் பயணச் சலுகைத் திட்டத்திற்கான அரசாணை வழங்கும் நிகழ்ச்சி

11views
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் கட்டணமில்லா பேருந்துப் பயணச் சலுகைத் திட்டத்திற்கான அரசாணை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு பெ சாமிநாதன் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்ட தமிழறிஞர்கள் 100 பேருக்கு 2024~ 25 ஆம் ஆண்டுக்கான அரசாணை வழங்கி பேருரை நிகழ்த்தினார்.
மாதம் தோறும் ஓய்வூதியம் ₹7500 மற்றும் மருத்துவ படி ₹500 என உயர்த்தி வழங்கிய தமிழ்நாட்டின் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நூறில் ஒருவனாக பாராட்டுதலுடன் நன்றியினை உரித்தாக்கி மகிழ்கிறேன்.
தொடர்ந்து தமிழ்ப் பணி சோர்வுறாமல் தொடர்வதற்கு தமிழ்நாடு அரசின் இந்த ஊக்கத்தொகை பெரிதும் துணை நிற்கும்.
நீ சு பெருமாள்
பரமக்குடி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!