தமிழகம்

தென்காசி மாவட்ட பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

525views
தென்காசி மாவட்டத்தில் பொதுமக்கள் தங்கள் மனுக்களை அளிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பின் படி, தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்குவதற்காக வரும் பொதுமக்கள் திங்கள் கிழமை நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை மனுக்களை வழங்கலாம்.
இதர அலுவலக பணி நாட்களில் மாவட்ட ஆட்சித்தலைவரை நேரில் சந்தித்து மனு வழங்க வரும் பொதுமக்கள் பார்வையாளர்கள் நேரமான பிற்பகல் 3.00 மணி முதல் 4.00 மணி வரை மட்டும் தங்களது மனுக்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேற்படி நேரம் தவிர்த்து பிற அலுவலக நேரங்களில் மனு அளிக்க வரும் பொதுமக்கள் தங்களது மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மனுக்கள் பெட்டியில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் பொதுமக்கள் வசதிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக அழைப்பு மையத்தின் 1800 599 3599 எனும் கட்டணமில்லா தொலைபேசி எண் வாயிலாகவோ அல்லது 77 9001 9008 எனும் whatsapp எண் வாயிலாகவோ தங்களது குறைகளை பதிவு செய்து பயனடையுமாறு தென்காசி மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!