தமிழகம்

தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் நடைப்பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் பொருத்தும் நிகழ்ச்சி

52views
தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் அமைந்துள்ள மாற்று திறனாளிகள் நலத்துறை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் இன்று ( 21-01-2023 ) மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் பொருத்தும் நிகழ்ச்சிக்கு 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்டம் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் நல அலுவலகத்தில் இன்று கிரீடம் தொண்டு நிறுவனம் மற்றும் தேனி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் இணைந்து 140 கால் இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் பொருத்தும் பணிக்காக அளவீடு செய்யப்பட்டது.

இன்னும் ஒரு மாதத்திற்கு பிறகு 140 நபர்களுக்கு செயற்கை கால் வழங்கப்படும் என மாற்றுத்திறனாளி அலுவலர் சீனிவாசன் மற்றும் கிரீடம் தொண்டு நிறுவனத்தின் மருத்துவர் ஜெயவேல் (மூட நீக்கியல் வல்லுனர்) தெரிவித்தார்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!