தமிழகம்

திருப்பரங்குன்றம் கோவில் உண்டியலில் இருந்து 38,18,515 ரூபாய் ரொக்கமும்,130 கிராம் தங்கமும், 1கிலோ 715 கிராம் வெள்ளியும் கிடைக்கப் பெற்றது

97views
ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பரமணியசுவாமி கோயிலில் இன்று உண்டியல் திறந்து எண்ணப்பட்ட இதில் ரூபாய் 38லட்சத்து 18 ஆயிரத்து 515 ரூபாய் ரொக்கமாகவும், தங்கம் 130 கிராம், வெள்ளி 1 கிலோ 715 கிராம் உண்டியல் மூலம் கிடைக்கப் பெற்றது.
திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் மாதம் ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம் இந்த நிலையில் கார்த்திகை மாதத்திற்கான உண்டியல் இன்று திறந்து எண்ணப்பட்டது. அதில் பணம் ரூ.38 லட்சத்து, 18 ஆயிரத்து 515 ரூபாய், தங்கம் 130 கிராம், வெள்ளி 1 கிலோ 715 கிராம் இருந்தது.
இதில் திருப்பரங்குன்றம் கோயில் துணை ஆணையர் சுமேஷ் முன்னிலையில் ஸ்கந்தகுரு பாடசாலை மாணவர்கள், ஐய்யப்ப சேவா சங்கத்தினர் மற்றும் கோயில் பணியாளர்கள் இந்த உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!