தமிழகம்

காட்பாடி அடுத்த பிரம்மபுரம் ஸ்ரீஒண்டி வீட்டம்மன் ஆலைய கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

122views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஒண்டிவீட்டம்மன் மற்றும் ஸ்ரீ சக்தி விநாயகர் கும்பாபிஷேகம் நடந்தது.  முதல், 2-ம் கால யாகசாலை பூஜை, கலச புறப்பாடு, ஒண்டிவீட்டம்மன் மற்றும் விநாயகர் கும்பாபிஷேகம் நடந்த பின் சிறப்பு அலங்கார தரிசனம் பின் பிரசாத விநியோகமும் மாலை சுவாமி திருவீதி உலா நடந்தது.
இதில் அதிமுக மாநில அமைப்பு செயலாளர் வி. ராமு, மாவட்ட மாநகர அதிமுக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி தலைவர் எம். பிரகாசம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.  வேலூர் மாநகராட்சி 6-வது வார்டு திமுக கவுன்சிலர் கே. ஜி.சீனிவாசன், வேலூர் மாவட்ட கேபிள் டி.வி. பொருளாளர் கே.வி.குப்பம் கே. லோகநாதன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சந்தர் கணேஷ், அதிமுக மகளிர் அணி ஜெயந்தி மற்றும் அப்பகுதியை சேர்ந்த திரளான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை ஆலைய திருப்பணிக்குழுத் தலைவரும் முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான பி. டி. புகழ்வேந்தன். செயலாளர் சீனிவாசன், பொருளாளர். பினாங்கர் ஆர்.கிருஷ்ணன், துணைத்தலைவர் ஆர்.ஜெய்கிருஷ்ணன், துணைச் செயலாளர் பி. விநாயகமூர்த்தி, தளவாய் ஜி.நடராஜன் மற்றும் கிராம பொதுமக்கள், முத்தரையர் இளைஞர் அணியினர் செய்து இருந்தனர்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!