தமிழகம்

சின்னமனூர் வட்டார தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி

61views
சின்னமனூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து குறுவை மையத்திலும் இன்று தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.
4 முதல் 5 ம் வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு ஆங்கில உச்சரிப்பு மற்றும் பயிற்சியும்,அப்பயிற்யில் மாணவர்களுக்கு ஆங்கில வார்த்தை எப்படி உட்சரிப்பு செய்ய வேண்டும்,தமிழ் மொழியுடன் எப்படி ஒன்றி மாணவர்களுக்கு பயிற்சியளித்து ஆங்கில மொழி திறனை வளர்ப்பது என்பது பற்றி விளக்கப்பட்டது. ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் குறித்து பயிற்சி நடைபெற்றது.

சின்னமனூர் ஒன்றியத்தில் சங்கராபுரம் , குச்சனூர் , சின்னமனூர் எரசை ஓடைப்பட்டி சீப்பாலக்கோட்டை ஆகிய குறுவள மையங்களில் பயிற்சி நடைபெற்றது. பயிற்சியின் எளிதாக்குபவர்களாக பள்ளி ஆசிரியர்கள் செயல்பட்டனர். ஆசிரியர் பயிற்றுநர்கள் பயிற்சியினை வழி நடத்தி சென்றனர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!