தமிழகம்

மதுரையில் திடீரென பெய்த கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

44views
வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி இன்று மதுரை மாட்டுத்தாவணி, கோரிப்பாளையம், அண்ணா நகர், வண்டியூர், முனிச்சாலை, பழங்காநத்தம், பொன்மேனி, காளவாசல், ஆரப்பாளையம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென பலத்த காற்றுடன் கோடை மழை பெய்தது.
கடந்த இரு வாரமாக தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெறிக்க தொடங்கிய நிலையில், கடும் வெயிலால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று மாலை பெய்த திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!