தமிழகம்

திருச்சியில் நடந்த மாநில அளவிலான வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற ராஜபாளையத்தை சேர்ந்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

110views
38 வது மாநில அளவிலான பாரதியார் தின குழு விளையாட்டு போட்டிகள், திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் செயல்படும் தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த 8ம் தேதி முதல் 10 ம் தேதி வரை நடைபெற்றது. போட்டிகளில் திருப்பூர், தென்காசி, சென்னை, கன்னியாகுமரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மொத்தம் 40 அணியினர் கலந்து கொண்டனர்.
இப் போட்டியில் கலந்து கொண்ட விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இன்று பாராட்டு விழா நடைபெற்றது. தனியார் பள்ளி கலையங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர், பள்ளி தாளாளர், நிர்வாகிகள், ஆசிரியைகள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என 400 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மாநில அளவில் 2ம் இடம் பிடித்து வெற்றி பெற்ற மாணவர் அணியினருக்கு ரொக்க பரிசுடன் கோப்பை, பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை சிறப்பு விருந்தினர்கள் வழங்கினர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!