விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை நேரத்தில் பலத்த மழை பெய்தது. வடகிழக்கு பருவமழை துவங்கியவுடன் விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக முற்றிலும் மழை இல்லாத நிலையில், கோடை காலத்தைப் போல வெயில் கடுமையாக இருந்து வந்தது. கடந்த 2 நாட்களாக மேகமூட்டமாக இருந்தாலும் மழை பெய்யவில்லை.
இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென்று பலத்த மழை பெய்தது. திடீர் மழை காரணமாக மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. கழிவுநீர் வாறுகால்கள் நிரம்பி, மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலைகளில் ஆங்காங்கே தேங்கி நிற்கின்றது. சிவகாசி புறநகர் பகுதிகள், நாரணாபுரம் சாலை, ஓம் சேர்மா நகர், அம்மன் நகர், செல்லையநாயக்கன்பட்டி, மீனம்பட்டி, பாறைப்பட்டி, பேராபட்டி, அனுப்பங்குளம், மேட்டமலை, சித்துராஜபுரம், சசிநகர், பேர்நாயக்கன்பட்டி, மடத்துப்பட்டி, உப்புபட்டி, மாரனேரி, கல்லமநாயக்கர்பட்டி, மாதாங்கோவில்பட்டி, அம்மாபட்டி, மம்சாபுரம், திருத்தங்கல், வெள்ளையாபுரம், கங்காகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக பலத்த மழை பெய்துள்ளது.
இரண்டு வாரங்களுக்கு பின்பு மழை பெய்திருப்பது விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சி தருவதாக உள்ளது.
செய்தக்க வல்ல செய்யக் கெடுஞ் செய்தக்க செய்யாமை யானுங் கெடும்.. - இது நம் திருக்குறள்! இதுதான் இன்றைய அரைவேக்காட்டு சாப்பாடு. அதாவது நம் நாட்டு அரசியல்?!...
' ராமம் ராகவம் ' பட டீஸர் வெளியீட்டு விழாவில், டைரக்டர் பாலா, நடிகர்கள் சமுத்நிரகனி, சூரி, தம்பி ராமையா, பாபி சிம்ஹா, டைரக்டர்கள் பாண்டிராஜ், தீபக்,...
ஒரு நொடி : திரை விமர்சனம் தமிழ் சினிமாக்கள் சமீபகாலமாக நல்ல கதை அம்சத்துடன் வெளிவருவது கொஞ்சம் ஆறுதல். அப்படி ஆறுதல்படும் விதமாக வந்திருக்கும் படம் தான்...
கதையாழத்துடன் கூடிய மலையாளப் படங்கள் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் வெளியாகி பெரியளவில் வசூல் குவித்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், மலையாள திரையுலகிலிருந்து ஒரு குழு தமிழில் 'ஆர் கே...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.