Uncategorizedதமிழகம்

மதுரை விமான நிலையத்தில் தனது வயதான பெற்றோரிடம் இந்தியில் பேசி நீண்ட நேரம் காக்க வைத்ததாக நடிகர் சித்தார்த் சமூக வளை தளங்களில் குற்றச்சாட்டு

301views
பிரபல சினிமா நடிகர் சித்தார்த் இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அதில் மதுரை விமான நிலையம் வந்த தனது வயதான பெற்றோரின் உடமையை சோதனை செய்த சி ஐ எஸ் எப் வீரர்கள் அவர்கள் பையில் இருந்த சில்லறைகளை சோதனையின்போது வெளியே எடுக்க சொல்லியும், மேலும் என் பெற்றோர் ஆங்கிலத்தில் பேசியும் பதிலுக்கு ஹிந்தியில் பேசியதாகவும். மேலும் கூட்டமே இல்லாத மதுரை விமான நிலையத்தில் இருபது நிமிடங்கள் தன்னுடைய வயதான பெற்றோரை காத்திருக்க வைத்ததாகவும் குற்றம் சாட்டி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தொடர்ந்து பல சர்ச்சை பதிவுகளை செய்துள்ள நடிகர் சித்தார்த்தன் இந்த பதிவு மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!