திருமங்கலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், மனுஸ்மிருதி புத்தகம் பொதுமக்களுக்கு விநியோகம்..
திருமங்கலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், மனுஸ்மிருதி புத்தகம் பொதுமக்களுக்கு விநியோகம் – பெண்கள், சூத்திரர்கள் பற்றி என்ன சொல்கிறது என்பது பற்றிய புத்தகத்தை விழிப்புணர்வு ஏற்படுத்த வழங்கல்.
பேருந்து நிலையப் பயணிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், நடைபாதை வியாபாரிகள் , மாணவ /மாணவியர்கள் உள்ளிட்டோருக்கு புத்தகம் வழங்கி விழிப்புணர்வு செய்யப்பட்டது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதிகளில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், திருமங்கலத்தில் பேருந்து நிலையத்தில் உள்ள சாலையோர கடைகள் மற்றும் பேருந்துக்காக நின்று கொண்டிருக்கும் பயணிகளிடமும், மாணவ, மாணவியர்கள், ஆட்டோ ஓட்டுநகர்களிடமும், பெண்கள் சூத்திரர்களைய் பற்றி விவரிக்கும் மனுஸ்மிருதி புத்தகமானது வழங்கப்பட்டது. பெண்களுக்கு நேர்ந்த கொடுமை பற்றி இப்புத்தகத்தில் உள்ளதாகவும் ,இதை இலவசமாகவே அனைவருக்கும் வழங்குவதாக கூறி பேருந்து பயணிகள் மற்றும் மாணவ, மாணவிகளிடம் விடுதலை சிறுத்தை கட்சியினர் வழங்கினர்.
திருமங்கலம் சிபிஎம் தாலுகா செயலாளர் சந்தானம் உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டு மனுஸ்மிருதி புத்தகத்தை வழங்கினார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்