தமிழகம்

கிணற்றுக்குள் இரண்டு நாளாக மேலாக தவித்த நாயை மீட்ட தீயணைப்பு துறை

214views
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள மீனாட்சிபுரம் கருப்பசாமி கோயில் தெருவில் ஊர் பொது கிணறு உள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன்னதாக நாய் ஒன்று தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டது.
நாய் குரைக்கும் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் இன்று பகலில் ராஜபாளையம் தீ அணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தீ அணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் மீட்பு குழுவை சேர்ந்த 7 பேர் இணைந்து சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு கயிறு கட்டி நாயை பத்திரமாக மீட்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!