தமிழகம்

சோதனை சாவடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மீது மாடு கொள்ளை அடிக்கும் கும்பல் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது வாகனத்தை நிறுத்தாமல் சென்று காயமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் இல்லத்திற்கு சென்று நலம் விசாரித்த காவல்துறை உயர் அதிகாரிகள்

248views
கடத்த மூன்று நாட்களுக்கு முன்பாக மதுரை பறவை காய்கறி மார்க்கெட் சோதனை சாவடி அருகே கும்பல் ஒன்று லாரியில் மாடு கொள்ளை அடித்து வருவதாக இளைஞர்கள் இருவர் தகவல் தெரிவித்தனர் அப்பொழுது பாதுகாப்பு பணியில் இருந்த கூடல் புதூர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தவமணி உடனடியாக சற்றும் தாமதிக்காமல் பேரி கார்டை போட்டு வாகனத்தை தடுத்து உள்ளார் அப்பொழுது வாகனத்தை நிறுத்தாமல் பேரிகாடுகளை இடித்துக் கொண்டு கொள்ளை கும்பல் மின்னல் வேகத்தில் தப்பி சென்றது இதில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தவமணி காலில் படுகாயம் ஏற்பட்டது உடனடியாக அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு பெண் என்று இல்லம் திரும்பினார் இல்லம் திரும்பிய அவரை மதுரை விளாங்குடியில் உள்ள இவரது இல்லத்தில் மதுரை மாநகர துணை ஆணையாளர் அரவிந்த் மதுரை தெற்கு காவல் உதவி ஆணையாளர் செல்லூர் சரகம் விஜயகுமார் மற்றும் கூடல் புதூர் சட்ட ஒழுங்கு காவல் ஆய்வாளர் மதுரை வீரன் ஆகியோர் மாடு கொள்ளையர்கள் வாகனம் தாக்கியதில் படுகாயம் அடைந்த தவமணி இல்லத்திற்கு சென்று நலம் விசாரித்து சென்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!