ஈரானில் இருந்து மூன்று மாத சுற்றுப்பயணம் வந்த தம்பதி , மதுரை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தபால் நிலையத்தில் நுழைந்து பணத்தை பறித்து சென்ற சம்பவம் – இருவரை கைது செய்து டி. கல்லுப்பட்டி போலீசார் விசாரணை.
246
மதுரை மாவட்டம் திருமங்கலம் – ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டி. குன்னத்தூர் கிராமத்தில் , தபால் அலுவலகம் இயங்கி வருகிறது .இந்த தபால் அலுவலகத்தில் சரண்யா என்பவர் அலுவலராக பணிபுரிந்து வருகிறார் .
கடந்த 22 ஆம் தேதி காரில் வந்த ஈரானை சேர்ந்த தம்பதி , தங்களிடம் டாலர் நோட்டு உள்ளதாகவும், அதனை இந்திய ரூபாய்களாக மாற்ற வேண்டுமென சரண்யாவிடம் கேட்டபோது, இங்கு அதற்கான வசதி இல்லை மதுரை தலைமை தபால் நிலையத்திற்கு செல்லுங்கள் எனப் பேசிக்கொண்டிருந்த சரண்யாவின் கவனத்தை திசை திருப்பி பேசிக் கொண்டிருந்தபோது , அந்த நபர் தபால் நிலையத்தில் வைத்திருந்த ரூ.24,800/- பணத்தை எடுத்துச் சென்றார்.