தமிழகம்

பேருந்து ஓட்டுநரின் இரண்டு சக்கர வாகனம் திருடிய இரண்டு வாலிபர்கள் கைது

37views
கெங்கவல்லி அருகே அரசு பேருந்து ஓட்டுநரின் இரண்டு சக்கர வாகனம் திருடிக் சென்ற தர்மபுரி சேர்ந்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அடுத்த ஜோதிபுரம் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் 49 அரசு பஸ் டிரைவர் ஆன இவர் கடந்த 3ஆம் தேதி தனது டூவீலரில் 74 கிருஷ்ணாபுரத்தில் உள்ள நண்பரை பார்க்க சென்றார் அவரது வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு சென்று நண்பரை பார்த்துவிட்டு வெளியே வந்த போது டூவீலர் திருடு போயிருந்தது இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார் இது குறித்து புகாரின் பேரில் கெங்கவல்லி எஸ்ஐ மணிமாறன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
மேலும் 74 கிருஷ்ணாபுரம் மற்றும் கெங்கவல்லி கடைவீதி பஸ் ஸ்டாப் உள்ளிட்ட இடங்களில் பொருத்தியுள்ள சிசிடிவி யில் கேமராவை பதிவை ஆய்வு செய்தார் அப்போது திருடு போன வாகனம் செல்வதை கண்டுபிடித்தவர் திருட்டில் ஈடுபட்ட தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் சேர்ந்த ஆனந்தன் மகன் அல்லி முத்து 24 காளியப்பன் மகன் பூபதி 23 ஆகிய இருவரின் கைது செய்தனர் இவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் திருவண்ணாமலையில் விற்கப்பட்ட டூவீலரை போலீசார் பறிமுதல் செய்தனர் பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஆத்தூர் சிறையில் அடைத்தனர் தலைமறைவான வெங்கடேசன் தேடி வருகின்றனர் .
செய்தியாளர் : ரா.மணிகண்டன், சேலம் மாவட்டம் – கெங்கவல்லி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!