தமிழகம்

ரோட்டில் நடந்து சென்ற மனநிலை பாதிக்கப்பட்டவர் கால் தவறி கிணற்றில் விழுந்தார் துரிதமாக சென்று காப்பாற்ற தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர்

41views
மதுரை மாவட்டம் திருமங்கலம் கற்பகம் நகர் அருகில் உள்ள ஏர்போர்ட் ரோட்டில் சித்தன் டயர் கம்பெனி அருகில் 60 அடி ஆழம் 20 X 20 அகலம் உள்ள கிணற்றில் பசிர் வயது 55என்பவர் மனநிலை சரியில்லாதவர் நிலை தடுமாறி விழுந்து விட்டார் என மதுரை திருமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் வந்தது.
இதனை அடுத்து நிலைய அலுவலர் அலுவலர் ஜெயராணி தலைமையில் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு வீரர்கள் மகாராஜன் அருண்குமார் மற்றும் குழுவினருடன் சேர்ந்து நீரில் தத்தளித்துக் கொண்டு கொண்டிருந்த பஷீர் உயிருடன் காப்பாற்றப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மதுரை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் துரிதமாக செயல்பட்டு கிணற்றுக்குள் தத்தளித்த மனநலம் பாதிக்கப்பட்டவரை உயிருடன் மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினருக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினார்கள் தெரிவித்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!