ராமநாதபுரம் அருகே தேவிபட்டினம் காந்தி நகர் நியாய விலைக்கடையை ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் இன்று ஆய்வு செய்தார். அங்கு பதிவேட்டில் உள்ளபடி உணவு பொருள்களின் இருப்பு குறித்து ஆய்வு செய்தார். இதில் 2,150 கிலோ அரிசி குறைவு கண்டறியப்பட்டது. துவரம் பருப்பு 180 கிலோ இருப்பை விட அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது. இது குறித்து விற்பனையாளர்களிடம் விவரம் கேட்டறிந்து, உணவுப் பொருட்களின் குறைவுக்காக ரூ.63 ஆயிரத்து 200 அபராதம் விதித்து அரசு கணக்கில் செலுத்த விற்பனையாளருக்கு கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவிட்டார்.
தேவிபட்டினம், பெரிய கடை வீதியில் உள்ள நியாய விலை கடைக்கு சென்று உணவுப் பொருள்கள் இருப்பு குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் அங்கிருந்த பொதுமக்களிடம் நியாய விலை கடையிலிருந்து உணவுப் பொருட்கள் சரியாக வழங்கப்படுகிறதா என கேட்டறிந்ததுடன் பொதுமக்களுக்கு உணவுப் பொருட்களை தடையின்றி வழங்க வேண்டும் என பணியாளருக்கு மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் அறிவுறுத்தினார். மாவட்ட வழங்கல் அலுவலர் மரகதநாதன், ராமநாதபுரம் வட்ட வழங்கல் அலுவலர் தமீம் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஒரு நொடி : திரை விமர்சனம் தமிழ் சினிமாக்கள் சமீபகாலமாக நல்ல கதை அம்சத்துடன் வெளிவருவது கொஞ்சம் ஆறுதல். அப்படி ஆறுதல்படும் விதமாக வந்திருக்கும் படம் தான்...
கதையாழத்துடன் கூடிய மலையாளப் படங்கள் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் வெளியாகி பெரியளவில் வசூல் குவித்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், மலையாள திரையுலகிலிருந்து ஒரு குழு தமிழில் 'ஆர் கே...
நவீன் லக்ஷ்மன், அருண்குமார் தயாரிப்பில் நவீன் லக்ஷ்மன் இயக்கத்தில் 'தீட்டு" சிங்கிள் டிராக் ஆல்பம் விரைவில் வெளிவரவுள்ளது. பெண்களின் மாதாந்திர அவஸ்தையை மையமாக கொண்டு உருவாகியுள்ள தீட்டு...
கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் பகல் 12:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்ட விவாத நிகழ்ச்சி "வா தமிழா வா". மக்களின் குரலாய், மக்கள் நினைப்பதை பேசிட...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.