தமிழகம்

உசிலம்பட்டி அருகே கல்யாணிபட்டி விலக்கில் மதுகடை திறப்பதை கண்டித்து கிராமமக்கள் போராட்டம்

77views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கல்லூத்து ஊராட்சிக்கு உட்பட்டது கல்யாணிபட்டி கிராமம்.இக்கிராமத்தின் விலக்கில் புதிதாக மதுபான கடை திறக்கபட உள்ளது. இந்த மதுபான திறக்கபட்டால் அக்கிராம பெண்களும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகளும் சாலையில் செல்லும் போது தவறான செயல்களில் ஈடுபடுதற்கு அதிக வாய்ப்புகள் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு இம்மது கடை திறக்கபட கூடாது என்று கூறி கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்இந்நிலையில் இன்று மதுக்கடை திறக்க உள்ள நிலையில் மதுகடையை திறக்க கூடாது என்று கல்யாணிபட்டி ஊர் பொதுமக்கள் மதுபானக்கடை அருகே போராட்டம் நடத்தி வருகிறன்றனர்.இந்த போராட்டத்திற்கு உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் நேரில சென்று கிராமமக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். .மேலும் மதுபான கடையை திறக்கபட்டால் அதற்கு கடுமையான போராட்டம் நடத்தபடும் என்று நாம் தமிழர் கட்சியினரும் மற்றும் ஊர் பொதுமக்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!