தமிழகம்

உசிலம்பட்டியில் தனியார் அறக்கட்டளை சார்பில் போத்தம்பட்டி ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு விழா

119views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே போத்தம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் உக்கிரபாண்டியன் கொரோனா காலகட்டங்களில் பொதுமக்களின் தேவைகளை அறிந்து தனது சொந்த செலவில் ஊர் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார், மேலும் போத்தம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் பொதுமக்கள் நலன் கருதி அவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, ரோடு வசதி, தெருவிளக்கு, கழிவுநீர் வாய்க்கால், என பல்வேறு பணிகளை செய்து பொதுமக்களின் மனதில் இடம் பிடித்த போத்தம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் உக்கிர பாண்டியனை பாராட்டும் விதமாக தராசு மக்கள் இயக்கத்தின் ஆய்வின்போது போத்தம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் உக்கிர பாண்டியன் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்தட்ட உதவிகள் வழங்கி வருவது தெரியவந்தது, அதனை தொடர்ந்து அவரை பாராட்டும் விதமாக தராசு மக்கள் இயக்கம் சார்பில் அவருக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது, இதில் தராசு மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் ஒன்றிய கவுன்சிலர் அலெக்ஸ் பாண்டியன், மற்றும் பொதுமக்கள் நிர்வாகிகள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்,
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!