தமிழகம்

தென்காசி அருகே அரசு பெண்கள் பள்ளிக்கு அச்சுப்பொறி வழங்கல்

83views
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ஔவையார் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளிக்கு அச்சுப்பொறி வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்வியாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கு பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க தலைவரும், கண்தான விழிப்புணர்வு குழு நிறுவனருமான இளங்கோ தலைமை தாங்கினார். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க பொருளாளர் பரமசிவம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தமிழரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை ஜான்சி ராணி வரவேற்புரை ஆற்றினார்.
ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி நிர்வாக இயக்குனர் எழில்வாணன் தனது சொந்த செலவில் பள்ளிக்கு அச்சுப்பொறி (கம்ப்யூட்டர் பிரிண்டர்) வழங்கினார். இந்நிகழ்வில் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் காவேரி சீனித்துரை, பள்ளி மேலாண்மை குழு தலைவி ஆனந்தசெல்வி, மேலாண்மை குழு உறுப்பினர் சாக்ரடீஸ் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் சங்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சிவ பார்வதி நாதன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க உறுப்பினர்கள் ஆனந்த், சுப்புராஜ், தங்கராஜ், டாக்டர் சினேகா பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!