தமிழகம்

தொடர் முழக்க போராட்டம்

229views
இன்று ( 28 – 11 – 2022 ) திங்கள் கிழமை காலை – 11 மணிக்கு நான்காவது நாளாக நீதி கேட்டு
தொடர் முழக்க போர்ட்டம் நடைபெற்றது.  தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியம் தென்கரை பேரூர் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் 4 வது வார்டு செயலாளர் இளையராஜா அவர்களின் வசித்து வந்த வீட்டை பெரியகுளம் வருவாய் துறை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சேர்ந்து சுமார் 60 ஆண்டுகாலமாக வசித்து வந்த வீட்டை இடித்ததை கண்டித்து நீதி கேட்டு தமிழக அரசையும் மாவட்ட நிர்வாகத்திடம் நீதி கேட்டு வீட்டை இடித்து தரைமட்டமாக்கிய அதிகாரிகள் மீது வண்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இளையராஜா குடும்பத்திற்கு இழப்பிடு வழங்க கோரியும் இடித்த வீட்டை மீண்டும் கட்டித்தர வலியுறுத்தியும் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி கள்ளிப்பட்டி ஆதிதிராவிடர் உறவின்முறை கிராம பொறுப்பாளர்கள் சார்பாக மனு அளிக்கப்பட்டது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த பொறுப்பாளர்கள் மாவட்டச் செயலாளர் ப.நாகரத்தினம், இளமதி, ஜோதிமுருகன் ,சேகுவேரா, தொல் தளபதி ,இனியன், வெற்றிவேல், மதன் ,தமிழ்ச்செல்வன் ஞானசேகர் ,ராஜாங்கம், மற்றும் ஊர் கிராம நிர்வாகிகள் செயலாளர் காளியப்பன், குருநாதன் ஆகியோர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டு வீடு இடிக்கப்பட்டது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் விளக்கி சொல்லப்பட்டது.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!