தமிழகம்

தொடர் முழக்க போராட்டம்

65views
இன்று (25 – 11 – 2022 ) காலை – 11 மணிக்கு மூன்றாம் நாளாக நீதி கேட்டு தொடர் முழக்க போர்ட்டம்
தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியம் தென்கரை பேரூர் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் 4 வது வார்டு செயலாளர் இளையராஜா அவர்களின் வசித்து வந்த வீட்டை பெரியகுளம் வருவாய் துறை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சேர்ந்து சுமார் 60 ஆண்டுகாலமாக வசித்து வந்த வீட்டை இடித்ததை கண்டித்து நீதி கேட்டு தமிழக அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்தும் வீட்டை இடித்து தரைமட்டமாக்கிய அதிகாரிகள் மீது வண்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இளையராஜா குடும்பத்திற்கு இழப்பிடு வழங்க கோரியும் இடித்த வீட்டை மீண்டும் கட்டித்தர வலியுறுத்தியும் பெரியகுளம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த பொறுப்பாளர்களும் தமிழ் புலிகள் கட்சி மற்றும் ஊர் பொதுமக்களும் சமூக சிந்தனையாளர்களும் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.

செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!