தமிழகம்

தைப்பொங்கல் தினத்தை கொண்டாட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் ஆயிரம் ரொக்கம் , அரிசி , சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவற்றை வழங்கும் தமிழக முதல்வருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவிப்பு – வீடு, வீடாக சென்று நியாயவிலைக்கடை ஊழியர்கள் அதற்கான டோக்கன் விநியோகம் செய்வதில் தீவிரம்.

195views
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இன்று முதல் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும், தமிழக அரசு அறிவித்த ரூபாய் ஆயிரம் ரொக்கப் பணமும் , ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை , ஒரு கரும்பு ஆகியவற்றை வழங்குவதற்கான டோக்கன் வீடு, வீடாக சென்று விநியோகம் இன்று முதல் துவங்கப்பட்டுள்ள நிலையில் ,  வீடு வீடாக சென்று குடும்பத்தாரர்களை நியாய விலை கடை ஊழியர்கள் சந்தித்து, தமிழக அரசு அறிவித்த பரிசுத்தொகை மற்றும் பொருட்கள் வழங்குவதற்கான டோக்கனை 03.01.23 முதல் வருகிற 8-ந்தேதி வரை வழங்கி வருகின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், தமிழக அரசு மற்றும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் ஆயிரம் ரொக்க பணமும், ஒரு கிலோ அரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கி உத்தரவிட்டமைக்கு நன்றி தெரிவித்து வாழ்த்து கூறினர்.

செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!