தமிழகம்

புளியங்குடியில் இரண்டாம் நிலை காவலர் மாதிரி தேர்வு

113views
தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் இரண்டாம் நிலை காவலர் உடல் தகுதி மாதிரி தேர்வு நடந்தது. இதில் அதிகமான மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர். புளியங்குடி பார்ட் கல்வி அறக்கட்டளையின் TNPSC பயிற்சி மையம், புளியங்குடி மருதம் பயிற்சி மையம் மற்றும் புளியங்குடி போதி பயிற்சி மையம் இணைந்து புளியங்குடி காவல் துணை ஆய்வாளர் செல்வம் மாணிக்கம் தலைமையில் இரண்டாம் நிலை காவலர் உடல் தகுதி மாதிரி தேர்வு நடைபெற்றது. புளியங்குடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் சனிக்கிழமை நடந்த இத்தேர்வில் மாணவ, மாணவியர்கள் அதிகமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சியில் பார்ட் கல்வி அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் முஹைதீன், செயலாளர் அப்துல் பாஸித், பொருளாளர் சேக் அப்துல் கரீம், பார்ட் உடற் பயிற்சி ஆசிரியர் பால்கனி, செயற்குழு உறுப்பினர் நிஹ்மத்துல்லாஹ், மருதம் பயிற்சி மையம் பயிற்றுனர்கள் மகேஷ் குமார், கிருஷ்ண குமார் மற்றும் போதி பயிற்சி மையத்தின் நிறுவனர் ஜெய்கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!