தமிழகம்

திருமங்கலத்தில் உள்ளபாமக நகரச் செயலாளராக பணியாற்றிய கண்ணையா, தற்போது மதுரை புறநகர் மாவட்ட தலைவராக பதவியேற்பு.

150views
மதுரை மாவட்டம் திருமங்கலம் முத்தாலம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் கண்ணையா (65)என்பவர் கடந்த 15 ஆண்டு காலமாக பாட்டாளி மக்கள் கட்சியில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது .
இவர் கடந்த முறை திருமங்கலம் பா.ம.க நகரச் செயலாளராக பணியாற்றினார். மேலும் கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சியின் சார்பில் வேட்பாளராகவும் போட்டியிட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தைலாபுரத்தில் அக்கட்சியின்செயற்குழு கூட்டம், கட்சி நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில், நடைபெற்ற கூட்டத்தில் கௌரவத் தலைவர் ஜி. கே. மணி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தின் போது திருமங்கலம் கண்ணையா (65)மதுரை புறநகர் மாவட்ட தலைவராக பதவி அளித்து அவருக்கு கட்சியின் சார்பில் சான்றிதழும் வழங்கப்பட்டது.இதனை தொடர்ந்து மதுரை புறநகர் மாவட்ட தலைவராக பொறுப்பேற்ற கண்ணையாவிற்கு, திருமங்கலத்தில் அக்கட்சியின் சார்பில் நிர்வாகிகள் சால்வை அணிவித்தும் ,மாலைகள் அணிவித்தும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!