தமிழகம்

அழகன்குளத்தில் அலையாத்தி காடு மரக்கன்று நடும் பணி தொடக்கம்

39views
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் அழகன்குளம் கிராமத்தில் 90 ஏக்கர் பரப்பல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் மூலம் முதல் கட்டமாக 1000 அலையாத்தி மரக்கன்று நடும் பணி நடந்தது. தமிழக சட்டமன்ற பொதுக்கணக்கு குழு தலைவர் கு.செல்வபெருந்தககை, குழு உறுப்பினர்களான பிரகாஷ் எம்எல்ஏ (ஒசூர்), மாரிமுத்து எம்எல்ஏ (திருத்துறை பூண்டி), கருமாணிக்கம் எம்எல்ஏ (திருவாடானை), மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார், மாவட்ட வன அலுவலர் பகான் ஜக்தீஷ் சுதாகர், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, மண்டபம் ஒன்றியம் குழு தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி, வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகநாதன், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன நிர்வாகி முகிலன் உள்ளிட்டோர் நிகழ்வில் மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டப்பணியாளர்கள் மூலம் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.

செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!