தமிழகம்

பசுமையான இயற்கை சூழ்நிலை நிலவும் வண்ணம் அவனியாபுரம் காவல் நிலையத்தில் உதவி ஆணையர் செல்வக்குமார் மரக்கன்றுகளை நட்டுவைத்தார்

68views
மதுரை மாநகர் போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின்படி துணை ஆணையர் சீனிவாச பெருமாள் அறிவுறுத்தலின்படி காவல் நிலையங்களில் பசுமையான இயற்கை சூழ்நிலை நிலவும் வண்ணம் அவனியாபுரம் காவல் நிலைய சுற்றுப்பகுதியில் உள்ள காலியிடங்களில் வேப்பம்,அரசமர , மாமரம்,பலாப்பழம் மரம் போன்ற 20க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை காவல் உதவி ஆணையர் செல்வகுமார் நட்டுவைத்தார்.
இதனை தொடர்ந்து அவனியாபுரம் காவல்துறையினர் பராமரித்து வருவார்கள் என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சேதுராமன், அருண்குமார்,சரவணன், தலைமை காவலர் காதர், மற்றும் காவலர்கள் அருண் நேரு, சதீஷ், குருவையா,சரவணன், உட்பட 20 காவலர்கள் மரக்கன்று நடும் பணியில் பங்கேற்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!