தமிழகம்

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஓபிஎஸ் படத்துடன் தங்கத்தேர் இழுத்து அதிமுக வினர் வழிபாடு – அதிமுகவினரின் செயலால் அதிர்ச்சி அடைந்த பத்தர்கள்

64views
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஓ பன்னீர்செல்வத்தின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்துடன் உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் முன்னாள் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தங்கத் தேர் இழுத்து வழிபாடு செய்தனர்.  பல அரசியல் கட்சியினர் தங்கள் கட்சி தலைவர்கள் பிறந்தநாளுக்கு தங்க தேர் , பால்குடம் எடுப்பது வழக்கம்.
ஆனால் ஒ .பன்னீர் செல்வம் படத்துடன் தங்கத் தேர் இழுத்தது  பார்வையாளர்களை அதிர்ச்சியடைய செய்தது.  தொடர்ந்து திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கியும் அவரது பிறந்தநாளை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாடினர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!