தமிழகம்

நோபல் வேர்ல்டு ரெக்கார்டுக்காக ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் 60 பெண்கள் கையால் எம்ப்ராய்டு செய்து சாதனை முயற்சி – ஊனமுற்றோர் /சிறுமி/ முதியோர் பெண்கள் உட்பட பலர் பங்கேற்பு

170views
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் சிற்பி ஆடிட்டோரியம் சார்பில் , நோபல் ரெக்கார்ட் – ல் இடம்பெறுவதற்காக தையல் கலை நிபுணர்கள் மரங்கள் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக,  ஒரு இடத்தில், ஒரு நேரத்தில் 60க்கும் மேற்பட்ட பெண்மணிகளை வைத்து கையால் எம்ப்ராய்டு செய்து சாதனை முயற்சியில் ஈடுபட்டனர் . துணியில் ஊசியை வைத்து மெல்லிய பாசி மூலம் , இந்தியா மேப் வரையப்பட்ட மேற்புறத்தில் கையால் குத்தி எம்பிராய்டரி செய்யும் இந்த நூதன சாதனை முயற்சியில் ஊனமுற்ற பெண்கள், விதவை மற்றும் முதியோர் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர் .  இவர்களுக்கான நேரம் இரண்டு மணி நேரம் ஒதுக்கப்பட்டது . நோபல் வேர்ல்டு ரிக்கார்ட்டில் இடம் பெறுவதற்காக நடத்தப்பட்டது.

செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!