தமிழகம்

தென்பரங்குன்றம் அருகே நடந்து சென்ற கொத்தனார் சுரேஷ் வெட்டிக்கொலை. கொத்தனார் சுரேஷ் கொலை தொடர்பாக திருப்பரங்குன்றம் போலீசார் உறவினர் உள்பட மூன்று பேரை கைது செய்தனர்.

76views
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தென்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 39) இவருக்கு சுகன்யா என்ற மனைவியும் ஒரு மகன் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் டைல்ஸ் வேலை பார்த்து வருகிறார் . இதே பகுதியைச் சேர்ந்த உறவினர் தீனா ( எ ) தீனதயாளன் என்பவருடன் பத்து வருடங்களுக்கு மேல் ஆக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
நிலையில் நேற்று இரவு 9 – 30 மணி அளவில் கொத்தனார் சுரேஷ் நடந்து வந்து கொண்டிருந்தபோது தீனா அவரது நண்பர்கள் விக்னேஸ் மற்றும் சிங்க ராஜா ஆகியோர் மது அருந்திகொண்டிருந்தனர். சுரேஷை பார்த்ததும் தீனா தகராறு செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து தீனா மற்றும் நண்பர்கள் வாளால் வெட்டியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த சுரேஷின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கொலை சம்பவம் தொடர்பாக தீனா, சிங்க ராஜா, விக்னேஸ்வரன் உள்பட மூன்று பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!