தமிழகம்

எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு

42views
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் முன்னாள் முதல்வர் எம்‌.ஜி.ஆரின் 35வது ஆண்டு நினைவுதினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
ராஜபாளையம் அதிமுக நகர ஒன்றிய கழகம் சார்பில் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் கிருஷ்ணராஜ் மற்றும் நகர் கழக செயலாளர்கள் வழக்கறிஞர் துரைமுருகேசன், பரமசிவம் ஆகியோர் சத்திரபட்டி சாலையில் அமைந்துள்ள எம்ஜிஆர் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்டக் கழக இணைச் செயலாளர் அழகுராணி, வனராஜ் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் நவரத்தினம் பேரூர் கழக செயலாளர்கள் பொன்ராஜ் பாண்டியன் , அங்கு துரை, மற்றும் கட்சி முக்கிய நிர்வாகிகள் மகளிர் அணியினர் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!