தமிழகம்

சிவகாசி அருகே, இலவச மருத்துவ முகாம்

61views
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள பள்ளபட்டி பகுதியில், பள்ளபட்டி ஊராட்சிமன்றம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமை ஊராட்சி மன்ற பொறுப்பு தலைவர் ராஜபாண்டியன் துவக்கி வைத்தார். டாக்டர் சிவசந்திரன் தலைமையில் மருத்துவக் குழுவினர் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்கினர். பெண்களுக்கான சிறப்பு சிகிச்சைகள், சர்க்கரை, ரத்த அழுத்தம், தோல் நோய்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டது. மருத்து முகாமில் பள்ளபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், ஒன்றிய கவுன்சிலர் கலைமணி, ஊராட்சி செயலாளர் லட்சுமணபெருமாள்சாமி,  வார்டு உறுப்பினர்கள் கனகலட்சுமி, பாண்டியராஜன், பாலசுப்ரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை, சிவகாசி அய்யநாடார் – ஜானகி அம்மாள் கல்லூரி முதல்வர் அசோக் வழிகாட்டுதலில், கல்லூரியின் நாட்டுநலப் பணித்திட்ட மாணவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!