தமிழகம்

மாயா குளம் ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்டத்தில் எந்த வேலையும் நடக்கவில்லை என ராமநாதபுரம் வருகை தந்த தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவரிடம் புகார்

58views
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாயாகுளம் ஊராட்சியில் சின்ன மாயாகுளம் அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் நாலு கோடியே 65 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிதியிலிருந்து எந்த வேலையும் முழுமையாக நடைபெறவில்லை என ராமநாதபுரம் வருகை தந்த தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுத் தலைவர் எஸ் ஆர் ராஜா மற்றும் உறுப்பினர்கள் நாகை மாலி மானாமதுரை தமிழரசி ரவிக்குமார் திருப்போரூர் பாலாஜி ஆகியோரிடம் ராமநாதபுரம் சட்டமன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் அற்புதகுமார் புகார் மனு அளித்துள்ளார். மேலும் அவருடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் விடுதலை சேகரன் மாவட்ட துணை செயலாளர் நைனா அசாருதீன் சமூக நல்லிணக்க பேரவையின் மாநில துணைச் செயலாளர் இஸ்மாயில் உடன் இருந்தனர்.

செய்தியாளர் சந்தோஷ் சிவம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!