தமிழகம்

மனிதநேய மக்கள் கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா!

79views
கம்பம் நகர மனிதநேய மக்கள் கட்சி சார்பாக மனிதநேய மக்கள் கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா முன்னிட்டு கம்பம் அரசு பொது மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டு, குழந்தைகள் வார்டு, பொது வார்டில் உள்ளவர்களுக்கு 10-2-2023 வெள்ளிக்கிழமை இன்று காலை 8.00 மணியளவில் கம்பம் நகர மமக தலைவர் தமீமுன் அன்சாரி தலைமையில் பிரட்,ஆப்பிள், பிஸ்கட் மற்றும் பூஸ்ட் பால் 100 பேர்களுக்கு வழங்கப்பட்டது. அதன் பின்னர் கம்பம் மெட்டு ரோட்டில் உள்ள கொடிகம்பத்தில் மனிதநேய மக்கள் கட்சி கொடி ஏற்றிவைக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
கம்பம் புதுப்பள்ளிவாசல் கீழ்புறம் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பிஸ்கட் மற்றும் மிட்டாய் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மமக மாவட்ட செயலாளர் அப்பாஸ் மந்திரி, தமுமுக மாவட்ட துணை செயலாளர் சலீம் பாட்ஷா, மாவட்ட ஐபிபி பொருளாளர் ஹக்கீம்,கம்பம் நகர பொருளாளர் ஜெய்லானி, துணைச் செயலாளர் ராஜா முகமது, முகமது ஆஷிக் மற்றும் ஆட்டோ சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!