தமிழகம்

வாடிப்பட்டியில் முதியோர், மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்டஉதவிகள்

42views
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அனாதைகள் நலஅறக்கட்டளை சார்பாக 31வது ஆண்டு ஏழை முதியோர், ஊனமுற்றோர், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச வேட்டிசேலை, போர்வை, நோட்டுபுத்தங்கள் வழங்கும் விழா தளபதி வீரப்பன் திடலில் நடந்தது. இந்தநிகழ்ச்சிக்கு தாசில்தார் வி.பார்த்திபன் தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்த விழாவிற்கு டாக்டர் சீத்தாலட்சுமி, வழக்கறிஞர் சந்திரசேகர்,கவுன்சில்ர்கள் ஐ.கே. குருநாதன், கார்திகாராணி மோகன், மீனாஆறுமுககடவுள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புலவர்குருசாமி வரவேற்றார். இதில் முதியோர், மாற்றுதிறனாளிகளுக்கு போர்வை, வேட்டி சேலைகளும், மாணவ-மாணவிகளுக்கு நோட்டுபுத்தங்களும் 600 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
இதில் முனியப்பன், கேசவன், முன்னாள்கவுன்சிலர் மகாசரவணன், முருகாண்டி, ரவிக்கண்ணன், சாந்தி உள்பட பலர்கலந்துகொண்டனர். முடிவில் டி.எம்.சரவணன் நன்றி கூறினார். இதன் ஏற்பாடுகளை அறக்கட்டளை நிறுவனத்தலைவர் ஏ.வி.பிரிதிவிராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!