மதுரை மாநகரில் நடந்த குற்ற சம்பவங்கள் மற்றும் விபத்துக்கள் மற்றும் தற்கொலை நிகழ்வுகள்
64
குடிபோதையில் மொட்டை மாடியில் நடந்தவர் தவறி விழுந்து பலி.
குடிபோதையில் மொட்டை மாடியில் நடந்து சென்றவர் தவறி விழுந்து பலியானார்.
மதுரை , பொன்மேனி மெயின் ரோடு நேதாஜி ரோட்டை சேர்ந்தவர் துரைராஜ் மகன் அருண்ராஜ் 32. இவர் குடிபோதையில் இருந்தார். வீட்டின் மொட்டை மாடியில் போதையில் நடந்து சென்ற போது தவறி கீழே விழுந்து விட்டார் .இதில் பலமாக அடிபட்டு உயிருக்கு போராடிய அருண்ராஜை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை இருந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் .இந்த சம்பவம் குறித்து, அவரது மனைவி முத்துமாரி, எஸ். எஸ். காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்
பதிவு செய்து அருண் ராஜின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் பெண் உள்பட இரண்டு பேர் தூக்கு போட்டு தற்கொலை:
மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் பெண் உட்பட இரண்டு பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
வண்டியூர் சௌராஷ்டிரபுரம் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் பானுமதி 54. இவருக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டது .சில நாட்களாக காய்ச்சல் தொடர்ந்ததால் மனம் உடைந்த பானுமதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவருடைய மகள் லட்சுமி பிரியா அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பானுமதியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொருவர் தூக்கு:
மதுரை ,ஆரப்பாளையம் கார்ப்பரேஷன் காலனியை சேர்ந்தவர் சௌந்தரராஜ் 40 .இவர் வீட்டில் தனியாக இருந்த போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்று தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து, கரிமேடு போலீசார் வழக்குப்
பதிவு செய்து சௌந்தரராஜனின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.