அவனியாபுரத்தில் பள்ளிக்கு செல்ல விருப்பமில்லாமல் ஒன்பதாம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை
அவனியாபுரம் எம் .எம். சி காலனி ஸ்ரீ ராம் நகரை சேர்ந்தவர் வழி விட்டான் மகள் மீனாட்சி 14 .இவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு பள்ளிக்கு செல்ல விருப்பமில்லை. இதை பெற்றோர் கண்டித்துள்ளனர் .பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர் .இதனால் மனமுடைந்த மாணவி மீனாட்சி சம்பவத்தன்று வீட்டில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.இதில் உடல் கருகிய நிலையில் அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த மாணவி மீனாட்சி சிகிச்சைபலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அவருடைய அம்மா மீனாம்பாள் அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆழ்வார் புரத்தில் பைக்கில் சென்ற வாலிபரை வழிமறித்து தாக்குதல் – மூன்று போதை வாலிபர்கள் கைது.
ஆழ்வார்புரத்தில் பைக்கில் சென்ற வாலிபரை வழிமறித்து தாக்கிய மூன்று போதை வாலிபர்களை போலீசார் கைதுசெய்தனர்.
செனாய் நகரைச்சேர்ந்தவர் மலைச்சாமி மகன் ரஞ்சித் 25.இவருக்கும் வைகை வடகரையை சேர்ந்தவர் வேல்முருகன் 42 இவர்களுக்குள் முன் விரோதம்தம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று ஆழ்வார்புரம் மூங்கில் கடை தெரு டாஸ்மார்க் அருகே பைக்கில் சென்ற வாலிபர் ரஞ்சித்தை வழிமறித்து வேல் முருகன் 42,சுபாஷ் காந்தி 32, சமயமுத்து 32 ஆகிய மூவரும் போதையில் இருந்த நிலையில் அவரை வழிமறித்து ஆபாசமாக பேசி தாக்கினர். இந்த சம்பவம்குறித்து ரஞ்சித் மதிச்சியம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தாக்கிய மூன்று வாலிபர்களை கைது செய்தனர்.
1920 ஆம் ஆண்டு மதுரைக்கு அருகில் உள்ள பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயரின் குற்ற இனச் சட்டத்திற்கு எதிராகப் போராடி பதினாறு பேர் உயிர் தியாகம் செய்தனர். அந்த சம்பவத்தை...
இசையமைப்பாளர் பிரவீன் குமார் - 2021-ஆம் ஆண்டு தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வீரர் பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான படம் மேதகு. இப்படத்திற்கு இசையமைத்து...
நடிகர், இயக்குனர் டான்ஸ்மாஸ்டர் தயாரிப்பாளர் என பண்முகம் கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவர் ஏற்கனவே பல நூறு ஆதரவு அற்ற குழந்தைகளை பராமரித்து அவர்களை சமுதாயத்தில் ஓரு...
ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு அவர்கள் ஆன்மீகப் பயணமாக கம்போடியாவிற்கு சென்றுள்ளார். அங்கு அந்நாட்டின் பிரதமர் திரு. ஹன் மானெட் சத்குருவை வரவேற்று, வாழ்த்தி எழுதிய...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.