தமிழகம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்காத ஒன்றிய மோடி அரசை கண்டித்து காந்தி சிலை முன்பு தமிழக எம்பிக்கள் போராட்டம்

65views
இன்று நாடாளுமன்றத்தில் 2023 ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஒன்றிய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்காததால் அதை கண்டித்து டெல்லி நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன்னே தமிழக எம்பிக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
இந்தப் போராட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வழிகாட்டுதல் குழு உறுப்பினரும் (பொறுப்பு கோவா) விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. மாணிக்கம் தாகூர் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சு வெங்கடேசன் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.செல்லகுமார் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.நடராஜன் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தனுஷ் குமார் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.நவாஸ் கனி திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஞான திரவியம் குமரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. விஜய் வசந்த் மற்றும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கார்த்திக் சிதம்பரம் உள்ளிட்ட ஆகியோர் கலந்து கொண்டனர்.
காந்தி சிலை முன்பு தமிழக எம்பிக்கள் செங்கல் ஏந்தி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்காதா ஒன்றிய நிதி அமைச்சரை மையப்படுத்தி கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.
மதுரையை தொடர்ந்து வஞ்சிக்கின்ற ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!